Thursday, December 9, 2010

3 இடியட்ஸூக்கு முன், நிறைய வேலை இருக்கிறது : விஜய் விளக்கம்!

ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிக்க மாட்டர் என செய்திகள் வெளியாகின. ஆனால், இதுபற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை. இதனையடுத்து '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிப்பாரா என்று கேள்விக்கு விடை தெரியாமல் அவரது ரசிகர்கள் தவித்து வந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஜய்.

இதுபற்றி அவர் கூறுகையில், '3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பதை தயாரிப்பாளர்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். எனக்கு ஷங்கர் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவர் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லும் வகையில் பணிப்புரிந்து வருகிறார். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா ஹீரோ போல் எனக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரமும் வர வேண்டும். எனக்கு கால்ஷீட் பிரச்சினைகள் உள்ளன. காவலன் படத்துக்கு சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதுபோன்ற பெரிய படங்களுக்கு பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

இவற்றைத் தாண்டி படத்தை வெளியிட்டாக வேண்டும். காமெடி, காதல், சென்டி மெண்ட் என முழுக்க முழுக்க ஒரு விஜய் படமாக காவலன் இருக்கும். மலையாள கதையை 75 சதவீதம் மாற்றிவிட்டோம். வேலாயுதம் படம் 50 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலை இருக்கிறது இந்தப் படத்தில். இதன் பிறகுதான் மற்ற படங்களில் நடிப்பது குறித்து சொல்வேன்...", என்றார்

No comments:

Post a Comment