Saturday, December 11, 2010

காவலன்-பெருமிதமாக மார்தட்டும் வடிவேலு

காவலன் படத்தில் விஜய்யை போல வடிவேலுவையும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஏனென்றால் இதற்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவை வைத்துக் கொண்டு சித்திக் ஏற்படுத்திய சிரிப்போற்சவம்,
இன்னும் சின்னத்திரைகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் காமெடி போர்ஷனை மட்டும் நல்ல ரேட்டுக்கு விலை பேசி வருகிறார்களாம் சேனல் காரர்கள்.அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே புதுப்புது ஸ்டைலில் வரப் போகிறார் வடிவேலு. 

ஒரு காட்சியில் இவர் உடல் முழுக்க காந்தத்தால் ஆன கோட் அணிந்து கொண்டு வருவாராம். யேய்... எனக்கு எதிரி எவனாயிருந்தாலும் அவன் கையில் வச்சிருக்கிற ஆயுதம் என்னை தாக்குவதற்கு முன்னாடியே என் கோட்ல பறந்து வந்து ஒட்டிக்கும். எப்படி நம்ம ஐடியா? என்று மார்தட்டுவாராம் வடிவேலு. அந்த நேரம் பார்த்து ஒரு தண்ணி லாலி அந்த பக்கம் வர, லாரியின் பாடி இரும்பும், வடிவேலு பாடியின் காந்தமும் ஒட்டிக் கொள்ள, லாரியோடு லாரியாக பறப்பாராம் வடிவேலு. யோசிக்கும் போதே பொத்துக் கொள்கிறதா சிரிப்பு?

No comments:

Post a Comment