Tuesday, November 30, 2010

1000 பிரிண்ட்டுகளுடன் காவலன் ரிலீஸ்!!!!!!!!!!

விஜய்-அசின் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள படம் “காவலன்”. இந்த படத்துக்கு போடப்பட்ட தடையை சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியதால் “காவலன்” டிசம்பர் மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
காவலன் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையில் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்ததால் பிரச்சினை சுமூகமாக முடிந்துள்ளது.
இதுகுறித்து சக்தி சிதம்பரம் கூறுகையில் :
“காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையில் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுவிட்டது. வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பாடல்களும், மாத இறுதியில் உலகம் முழுவதும் 1000 பிரிண்ட்டுகளுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்

No comments:

Post a Comment