Wednesday, September 29, 2010

பெங்களூரில் பல்ப் வாங்கிய சூர்யா!


மறைந்த கன்னட புரட்சி தலைவர் ராஜ்குமாருக்கு முத்து முத்தாய் இரண்டு மகன்கள் இருப்பதும், அவர்கள் கன்னடத்தில் பெரிய நடிகர்களாக வலம் வருவதும் அனைவரும் அறிந்ததே…
இவரில் மூத்தவரான சிவராஜ் 1985 ல் நடிக்க வந்தவர். அவரின் 100-வது படமும், அவரின் 49-வது பிறந்த நாளும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் பெங்களூருவில் கொண்டாடப்பட்டது. இதில் நம்ம விஜய், சூர்யா, மற்றும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், தெலுங்கில் பேசிய சிரஞ்சீவி பெங்களூரு தெலுங்கு ரசிகர்களின் பெரும் கரகோஷத்தைப்பெற்றார்.
அடுத்து வந்த விஜய் தமிழில் பேச தமிழ் ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணைப்பிளந்தனர். ஆனால்… அவரை அடுத்து வந்த தமிழ்நாட்டு  ராக் பெல்லர் சூர்யா ஆங்கிலத்தில் பேச ரசிகர்கள் யாரும் கை அசைக்க கூட இல்லை.  ரொம்பவே நொந்து போனார் சூர்யா.

No comments:

Post a Comment