Thursday, September 30, 2010

விஜய்யின் அட்ஜஸ்ட்மென்ட்

மணி கூண்டுல சத்தம் வருதோ இல்லையோ, மணிகட்டுல இருக்கிற கடிகாரம் நினைவூட்டுதோ இல்லையோ, மண்டைக்குள்ளேயே ஒரு கடிகாரத்தை செட் பண்ணி வைத்திருக்கும் இரு முக்கிய நடிகர்கள் விஜய்யும் வடிவேலுவும்.

சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் ஆளை விடுங்க என்று கிளம்பிவிடுவார்கள். அது எவ்வளவு முக்கியமான ஷாட்டாக இருந்தாலும் மறுநாள்தான்.
இயக்குனர்களும் அவரது மூடுக்கேற்ப சாயங்காலம் ஆறு மணிக்குள் தான் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துவிட்டு போயிட்டு வாங்க சார் என்று விடைகொடுப்பதும் கால காலமாக நடக்கிற சங்கதி.

இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு குட்பை சொல்லிவிட்டார் விஜய்.
காவலன் படப்பிடிப்புக்கு நள்ளிரவு வரை இருந்து நடித்துக் கொடுத்துவிட்டுதான் செல்கிறாராம். காரணம் அசின். அவரது கால்ஷீட்டை இடையில் இழந்துவிட்டு இரண்டு மாதம் படாத பாடு பட்டுவிட்டார் சித்திக்.

அதனால் அவர் மீண்டும் கால்ஷீட் கொடுக்கிற தேதிகளுக்குள் படத்தையே முடித்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம். அதன் காரணமாக அசின் தேதி கொடுக்கும் போதெல்லாம் உங்க நேரத்தையும் கொஞ்சம் அனுசரிச்சு கொடுங்க என்று கேட்டாராம் விஜய்யிடம். அவரும் சம்மதித்துவிட்டார்

No comments:

Post a Comment