Monday, October 11, 2010

‎3 இடியட்ஸ் ஆர்ப்பாட்டம் நவம்பர் முதல்…

அப்பாடா… ஒரு வழியாக “3 இடியட்ஸ்” பற்றிய வதந்திகள் முடிவுக்கு வந்தாச்சுங்க…வரும் நவம்பர் மாதத்திலிருந்து ஷூட்டிங் போக தயாராகிட்டாங்க ஷங்கர் அன்ட் கோ.

இந்தியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் “3 இடியட்ஸ்”. தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் தயாரிக்கப்போவது ஜெமினி பிலிம் சர்க்யூட் . இரண்டு மொழிகளிலும் ஷங்கர் இயக்கவிருக்கிறார். தமிழ்ப் பதிப்பில் விஜயும், தெலுங்குப் பதிப்பில் மகேஷ் பாபுவும் நாயகர்களாக நடிக்கின்றனர்.

“எந்திரனை” இமாலய வெற்றி பெற வைத்துவிட்ட ஷங்கர் “3 இடியட்ஸ்” படப்பிடிப்பை துவக்கும் நோக்கில், மொத்த படக்ழுவையும் முனைப்புடன் தேர்வு செய்து வருகிறார். இளைய தளபதியுடன் நடிக்கும் மற்ற இரண்டு நாயகர்களாக ஜீவாவையும், சித்தார்த்தையும் தேர்வு செய்துவிட்டார் ஷங்கர். கதாநாயகியாக இலியானாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

கேடிக்குப்பிறகு இலியானா தமிழில் நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. “3 இடியட்ஸ்” படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நாயகி இலியானாதான். இதற்கான ஒப்பந்தத்திலும் இலியானா கையெழுத்திட்டுள்ளார். தொடர்ந்து 4 மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் இலியானா.

இந்த படத்தில் இலியானாவுக்கு அப்பா வேடத்தில் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார். காலேஜ் புரப்பஷர் வேடத்தில் நடிக்க ஆர்வமுடன் உள்ளார் புரட்சி தமிழன். நவம்பர் மாதத்திலிருந்து இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிவிரைவில்

No comments:

Post a Comment