Thursday, October 14, 2010

காவலன் மேஜிக் ஆரம்பம்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இளைய தளபதி விஜய்யின் 51 வது படமாக வெளிவர தயாராகிவிட்டது “காவலன்”. சித்திக் இயக்கும் இந்த படம், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.
விஜய்யின் காவலன் படத்தின் வினியோக உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிருக்கும் சக்தி சிதம்பரத்திடமிருந்து, “காவலன்” உரிமையை வாங்க சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காவலனின் வெளிநாட்டு உரிமை தற்போது பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.
அசின் விவகாரத்தால் வெளிநாடுவாழ் தமிழ்சங்கங்கங்கள் அசின் நடித்த படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெறிவித்துவருகிறார்கள். இந்த நிலையிலும் காவலனின் வெளிநாட்டு உரிமையை பிரபல வினியோகஸ்தர் “டேன்ரா பிலிம்ஸ்” உரிமையாளர் ஜே.கே.சரவணா மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறார் ( காவலன் மேஜிக் ).


ஏற்கனவே விஜய்-சித்திக் கூட்டணியில் வெளிவந்த “ப்ரண்ட்ஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே. அதே மேஜிக் காவலனிலும் தொடரும் என்றும், விஜய்க்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் காவலன் யூனிட்டிலிருந்து கூறுகிறார்கள்.
விஜய்-வடிவேலு காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் காமெடி கலைகட்டியிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படத்திலும் விஜய்-வடிவேலு கெமிஸ்ட்ரி பட்டைய கிளப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள் “காவலன்” பட யூனிட்டார்.
ரசிகர்களின் எதிப்பார்ப்பை எகிறவைத்துள்ள “காவலன்” டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

No comments:

Post a Comment