Friday, October 8, 2010

3 இடியட்ஸ்-ஷங்கரின் சாய்ஸ் தீபிகா படுகோனே!

இந்தியில் பிரபல நடியான தீபிகா படுகோனேயின் பார்வை தற்போது தமிழ் படங்களின்மீது திரும்பியிருக்கிறது. முன்பே தமிழ் திரைப்படங்களில் தீபிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாலிவுட்டில் பிரபலமாக இருப்பதால் அவர் தமிழ்ப் படங்களில் நடிக்க விருப்பமின்றி இருந்து வந்தார்.

ஆனால் தற்போது “நான் தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்பிகிறேன்” என தெரிவித்துள்ளார் தீபிகா படுகோனே. இந்த மாற்றத்திற்கு காரணம் ரோபோட். ஆமாங்க… “ரோபோட்”டை பார்த்தவுடனேயே தென்னிந்திய படங்களில் நடிக்கவிரும்புவதாக தெரிவித்துள்ளார் தீபிகா. அதிலும் தமிழ்ப் படங்களே அவரின் முதல் விருப்பமாக உள்ளது.

அநேகமாக ஷங்கரின் அடுத்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாகலாம் எனக் கூறப்படுகிறது. தான் தென்னிந்தியாவை சேர்ந்தவள் என்றும், தென்னிந்தியப் படங்களில் நடிக்க எப்பொழுதும் ஆவலுடன் இருப்பதாகவும், தமிழ்ப் படங்களில் நடிக்க சிறந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தீபிகா தெரிவித்துள்ளார்.

ஷங்கர் தனது படத்தில் தீபிகாவை நாயகியாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அனேகமாக “3 இடியட்ஸ்” தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கக்கூடும் என்று ஷங்கர் வட்டாரங்கள் கூறுகின்றன. பாலிவுட்டின் இந்த அழகு தேவதையை, தமிழ் சினிமாவிற்குக் கொண்டு வர ஷங்கரால் மட்டுமே முடியும்.

சினேகா, நயன்தாரா, த்ரிஷா என பர்ர்த்த முகங்களையே பார்த்து பார்த்து சலித்துப்போன தமிழ் ரசிகர்களுக்கு, “தீபிகா” நிச்சயம் விருந்தளிப்பார் என்பதில் சந்தேகமில்லை

No comments:

Post a Comment