Friday, October 29, 2010

சீமானை புறக்கணிக்கத் தயாராகும் விஜய்!

இந்தப்படத்தின் இறுதிக் கட்ட காதல் காட்சிகள் படப்பிடிப்பு,  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா ஹார்ட்டிக் கல்சர் கார்டனில் நடந்து வருகிறது. இங்கே விஜயைத் தேடி வரும் நிருபர்கள் “ சீமான் இயக்கத்தில் நடிக்க இருகிறீர்களா?” என்ற கேள்வியையும், “ 3 இடியட்ஸ் எந்தக் கட்டத்தில் இருகிறது?” என்ற கேள்வியையும் கேட்கத்தவறவில்லை. ஆனால் விஜய்,  சீமான் கேள்விக்கு முற்றாக பதில் சொல்வதை தவிர்த்து விட்டதோடு,  அதுபத்தி எதுவும் போட்டுடாதீங்க என்றார்.
3 இடியட்ஸ் பத்தி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டார்.  இதனால் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க மாட்டார். விஜய் அதை விரும்பவில்லை. தனக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்று விஜய் நினைக்கிறார் என்கிறார்கள் விஜய் செய்தித்தொடர்பாளர் வட்டாரத்தில். அதேபோல இயக்குனர் சங்கமும் சீமானை கைவிட்டு விட்டதில் சீமான் முற்றிலுமாக தனிமைபடுத்தப் படிருகிறார் என்கிறார்கள்.
ஒரு இயக்குநராக சீமான் சிறை சென்றிருந்தால் இயக்குநர் சங்கம் சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும். அவர் ஒரு அமைப்பின் தலைவராக சிறை சென்றதால் இயக்குநர்கள் சங்கம் குரல் கொடுக்கவில்லை என சீமான் விவகாரம் குறித்து பாரதிராஜா ஏற்கனவே கருத்து சொன்ன நிலையில்,  சீமானை சிறையில் சென்று பார்க்க விரும்பிய அமீரையும் தடுத்து விட்டார்களாம் இயக்குனர் சங்கத்தில்.
சீமானுக்கு இனி சினிமா சங்கங்களின் குரல் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில், அக்டோபர் 20-ஆம் தேதி சீமான் வழக்கின் மீதான விசாரனை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருவதால் அன்று ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருகிறார்கள் சீமானின் ஐந்து லட்சம் தொண்டர்கள்

No comments:

Post a Comment